Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...
Showing posts with label 'தமிழருவி' மணியன். Show all posts
Showing posts with label 'தமிழருவி' மணியன். Show all posts

Sunday, September 15, 2013

காவியத் தாயின் இளைய மகன் / தமிழருவி!

image

திரை இசைப் பாடல்களை பாமரனும் ரசிக்கும் வண்ணம் தமிழை எளிமைப் படுத்தியவன் கண்ணதாசன். என்றும் நின்று இசைக்கும் பாடல்களை தமிழ் திரை உலகிற்கு தந்த மகா கவிஞன். இவனை திரை இசைப் பாடல்களின் மூலமாக மட்டும் தரிசிக்கும் பலருக்கு கவிஞரின் கவிதைகள் மற்றும் இன்ன பிற தகவல்களை தரமான தமிழால் எடுத்துக் காட்டுகிறார் இங்கே தமிழருவி மணியன் அவர்கள்.

காணொளிகளின் திரட்டு

காணொளிக் கீற்றுக்களின் திரட்டிற்கு செல்ல இங்கே அழுத்துங்கள்.

ஒலிக் கீற்றினை மட்டும் தரவிறக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.

Monday, July 29, 2013

விவேகானந்தர் விழாவில் தமிழருவி!

தமிழருவி மணியன் அவர்கள் விவேகானந்தர் தொடர்பாக அவர் விழா ஒன்றில் நிகழ்த்திய சொற்பொழிவு இது. பல்வேறு கருத்துக்களை சிந்திக்கும் வகையில் எம் செவிக்கும் சிந்தைக்கும் விருந்தாக்குகின்றார் மணியன் அவர்கள்.

காணொளிகளின் திரட்டு

இணையத்தில் தரவேற்றிய அன்பர் செங்கோட்டையனுக்கு (வழமை போல) நன்றிகள் பல.

காணொளிக் கீற்றுக்களின் திரட்டிற்கு செல்ல இங்கே அழுத்துங்கள்.

ஒலிக் கீற்றினை மட்டும் தரவிறக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.

Saturday, February 16, 2013

எங்கே போகிறோம் நாம்? - தமிழருவி மணியன்!

“எங்கே போகிறோம் நாம்?” இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கின்றோம். இந்தக் கேள்வியைத் தலைப்பாக்கி சிந்தனை முத்துக்களை விதைக்க வருகின்றார் தமிழருவி மணியன்! கேளுங்கள்… சிந்தனைப் பூக்களை மனதோரம் மலர விடுங்கள்…!

காணொளிக் கீற்றுக்களின் கொத்து (ஒன்பது கீற்றுக்களைக் கொண்டது.)

நேரடியாக கீற்றுகளின் திரட்டுக்குச் செல்ல இங்கே அழுத்துங்கள்.

 

ஒலிக் கீற்றினை மட்டும் தரவிறக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.


Tuesday, July 3, 2012

யாதும் ஊரே யாவரும் கேளிர் – தமிழரு மணியன்!

சங்கத் தமிழன் “யாதும் ஊரே யாவரும் கேளிர்…” என்று உலக ஒருமையைப் பற்றி என்றைக்கோ சிந்தித்து விட்டான். கணியன் பூங்குன்றனார் என்ற அந்தப் புலவனின் சிந்தனை விசாலமானது. தொடர்ந்து வரும் வரிகளைப் பாருங்கள். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” எத்தனை உயா்ந்த உண்மை!

தமிழருவி மணியன் அவா்கள், யாதும் ஊரே யாவரும் கேளிர்… என்ற வரிகளோடு சிந்திக்கும் வகையில் ஆற்றும் உரை இது…

முதலில் அந்தப் பாடலின் முழு வடிவம்:

யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றாலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.

சரி இனி தமிழருவி மணியனை செவிமடுப்போம்.

Friday, April 6, 2012

கம்பனில் பண்பாடு–தமிழருவி மணியன்

தள்ளாட்டம் இல்லாத தமிழுக்குச்  சொந்தக்காரா் தமிழருவி மணியன் அவா்கள். இதோ அவர் கம்பன் விழா ஒன்றில் கலந்து கொண்டு ஆற்றும் சொற்பொழிவு…

Wednesday, January 12, 2011

தாய் – தமிழருவி மணியன்!

தாய் மூலம் பூமிக்கு வருகிறோம். பானை வனையும் குயவன் போல உடல் செய்து உடலுக்குள் உயிர் உலவவிட்டு தாய் மூலம் பூமிக்கு அனுப்புகிறார் கடவுள்! தான் எங்கும் இருக்க முடியாது என்று கருதியதால் கருணையை அன்பை காதலை தாய் மூலம் உயிர்களுக்கு ஊட்டுகிறான் ஒளி போல் தெரியும் மேனியன்!

என்றும் துறக்கமுடியாத இச்சொந்தம் ஞானிகளையும் விட்டுவிடுவதில்லை என்பதற்குப் பட்டினத்தார் சாட்சி!

ஒப்புயா்வற்ற இச்சொந்தம் பற்றி அவள் சிறப்புகள் பற்றி அன்னை தமிழை அருகழைத்து அருவியாய் சொற்கள் தாவென இறைஞ்சி, வேண்டி தாயின் மேனியெங்கும் தங்கம் என தக தகக்கும் தமிழ் கொண்டு அழகு செய்கிறார் தமிழருவி மணியன் அவா்கள்!

இது தமிழருவி மணியன் அவா்களின் அற்புதச் சொல்லாற்றலால் இழைக்கப்பட்ட பேச்சு! கேட்பீா்! தாயைக் கொண்டாடுவீா்!

 

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Thursday, January 14, 2010

பட்டினத்தார் – தமிழருவி மணியன்

இவா் தமிழ் அருவியின் சாரல். கருத்துக்களின் குவியல். அந்த அருவியின் சாரலோடு கருத்துக்களை மனதில் நிறுத்தும் வண்ணம் பட்டினத்தார் பற்றிப் பேசுகிறார் தமிழருவி மணியன் அவா்கள்!

Sunday, November 1, 2009

கண்ணதாசன் கவிதைகள்

தமிழருவி மணியன் அவர்கள் அவருக்கே உரிய அழகிய நடையில் கண்ணதாசனின் கவிதைகள் என்ற பொருளில் ஆற்றுகின்ற உரை…

Powered by eSnips.com
Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்