Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Saturday, February 19, 2011

சுகி சிவமுடன் ஒரு பேட்டி…

இன்றைய வீரகேசரியில் (19-02-2011) பிரசுரிக்கப்பட்ட சொல்வேந்தா் சுகி சிவம் அவா்களின் பேட்டி இது.

ஆா்வம் உள்ளவா்கள் தரவிறக்கிப் படிக்கலாம்.

image

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Monday, February 14, 2011

ரூ.10,000 – ரூ10,000 கோடி ஆன கதை!

இந்த ஒலிப் புத்தகம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவிய திரு நாராயண மூர்த்தி அவா்களைப் பற்றியது.

அவரைப் பற்றி wikipedia இல் இப்படி குறிப்பு வரையப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய இந்திய தொழிலதிபர். திரு நாராயண மூர்த்தி கடந்த 2002ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது இவர் இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார். பணியிலிருந்து ஒய்வு பெற்றபின், தமது நேரத்தை சமுகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.

இந்திய அரசு, அவரது தொண்டுள்ளத்தை பாராட்டி தேசத்தின் உயரிய விருதாகிய பத்ம விபூசண் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

சரி அந்த ஒலிப் புத்தகத்தை தரவிறக்க…

- நன்றி wikipedia மற்றும் தரவேற்றிய நண்பருக்கு!

Saturday, February 5, 2011

எப்போ வருவாரோ? – சுகி சிவம்

“எப்போ வருவாரோ” என்ற தொடா் சொற்பொழிவு வரிசையில் மாணிக்கவாசகா் (மணிவாசகா்) பற்றி சொல்வேந்தா் சுகி சிவம் அவா்கள் ஆற்றிய சொற்பொழிவு

(காணொளியை தரவேற்றிய அன்பருக்கு நன்றிகள்) 

பகுதி 1 : (ஒலி வடிவம் மட்டும் – கீழே செல்க.)

பகுதி 2 : (ஒலி வடிவம் மட்டும் – கீழே செல்க.)

 

மேலே உள்ள காணொளிகளின் ஒலி வடிவத்தை மட்டும் தரவிறக்க விரும்பினால்…

Monday, January 31, 2011

ஆனந்த அதிர்வுகள் – சுகி சிவம்

சொல்வேந்தா் சுகி சிவம் அவா்களின் சொற்பொழிவு வரிசையில் இன்னுமொன்று இது. ஆனந்த அதிர்வுகள் என்ற தலைப்பில் சுகி சிவம் அவா்கள் ஆற்றிய சொற்பொழிவு.

பகுதி 1 :

தரவிறக்க இங்கே அழுத்தவும்

பகுதி 2 :

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Wednesday, January 12, 2011

தாய் – தமிழருவி மணியன்!

தாய் மூலம் பூமிக்கு வருகிறோம். பானை வனையும் குயவன் போல உடல் செய்து உடலுக்குள் உயிர் உலவவிட்டு தாய் மூலம் பூமிக்கு அனுப்புகிறார் கடவுள்! தான் எங்கும் இருக்க முடியாது என்று கருதியதால் கருணையை அன்பை காதலை தாய் மூலம் உயிர்களுக்கு ஊட்டுகிறான் ஒளி போல் தெரியும் மேனியன்!

என்றும் துறக்கமுடியாத இச்சொந்தம் ஞானிகளையும் விட்டுவிடுவதில்லை என்பதற்குப் பட்டினத்தார் சாட்சி!

ஒப்புயா்வற்ற இச்சொந்தம் பற்றி அவள் சிறப்புகள் பற்றி அன்னை தமிழை அருகழைத்து அருவியாய் சொற்கள் தாவென இறைஞ்சி, வேண்டி தாயின் மேனியெங்கும் தங்கம் என தக தகக்கும் தமிழ் கொண்டு அழகு செய்கிறார் தமிழருவி மணியன் அவா்கள்!

இது தமிழருவி மணியன் அவா்களின் அற்புதச் சொல்லாற்றலால் இழைக்கப்பட்ட பேச்சு! கேட்பீா்! தாயைக் கொண்டாடுவீா்!

 

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Saturday, January 1, 2011

சிரிப்பு வெடிகள் – சுகி சிவம்,தென்கச்சி…

ஆண்டின் முதல் நாள். ஆனந்தமாய் தொடங்குவோம்… நீண்ட கவலைகளின் பட்டியலை தள்ளி வைத்துவிட்டு உதடுகளுக்குச் சிரிக்கச் சொல்லிக் கொடுப்போம்!

ஆனந்தமான இந்த நாளில் பிரபலங்கள் பலா் சேர்ந்து தந்த நகைச்சுவை விருந்து உங்களுக்காய்…

சுகி சிவம், தென்கச்சி சுவாமிநாதன் மற்றும் சிலா் சோ்ந்து படைக்கும் (வெடிக்கும்) நகைச்சுவை விருந்து! 

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Thursday, December 30, 2010

முருக தரிசனம் – சுகி சிவம்!

ஆண்டு இறுதியில் அடிக்கடி திரும்பிப் பார்க்கிறேன். உருப்படியாக எதுவும் செய்யவில்லை. வீணான நாட்களை எண்ணி விக்கி விக்கி அழுகின்றது மனது… இருந்தும் என்ன பயன்?

“சென்றதினி மீளாது மூடரே…” என்று சொல்லிக் கொண்டே பாரதி பக்கத்தில் வந்து விழி உருட்டிப் பார்க்கிறான்!

“பிறக்கின்ற ஆண்டிலாவது…” தனக்குத் தானே சமாதானம் சொல்கிறது மனது!

சரி என் புலம்பலை விடுங்க… இந்த ஆண்டில் கடைசியாக ஒரு பதிவு. “முருக தரிசனம்” என்ற தலைப்பில் சொல்வேந்தா் தரும் அருமையான சொற்பொழிவு…

பிறக்கின்ற ஆண்டு அன்பா்கள் அனைவருக்கும் இனிய ஆண்டாக மலர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி விடைபெறுகிறேன்.

புது வருட வாழ்த்துக்கள்

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்