திருமணத்திற்கு முன் இருக்கின்ற உறவு நிலை, சுமூக நிலை எல்லாம் திருமணத்திற்குப் பின் தவிர்க்கமுடியாமல் மாறிவிடுகிறது. அது மாதிரியான களத்தை கையகப்படுத்துகின்றது மனுஷ்யபுத்திரனின் இக்கவிதை…
நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,
இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.
விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
Friday, November 6, 2009
என்ன நடக்குதென்னு…
சோகத்தின் சுவடுகளை சொற்களில் அடக்கமுடியுமா? முடியுமே என்று விஸ்வரூபம் எடுக்கிறது அறிவுமதியின் இக் கவிதை! அறிவுமதி அவர்கள் தன் குரலில் தரும் இக்கவிதையின் களம் தவிர்க்க முடியாமல் கண்முன் விரிகின்றது. சொல்லமுடியாத சோகம் ஓடி வந்து ஒட்டிக் கொள்கின்றது…
Sunday, November 1, 2009
கண்ணதாசன் கவிதைகள்
தமிழருவி மணியன் அவர்கள் அவருக்கே உரிய அழகிய நடையில் கண்ணதாசனின் கவிதைகள் என்ற பொருளில் ஆற்றுகின்ற உரை…
| Powered by eSnips.com |
Friday, October 30, 2009
வலம்புரி தரும் தமிழ்க் கனி!
“வலம்புரி” ஜானின் வற்றாத தமிழ் கேட்டுச் சிட்டாகப் பறக்காதோ உள்ளம்? பல தளங்கங்களைத் தொட்டு நிற்கின்ற பேச்சு குறிப்பாக தாயையும் தாய் மொழியையும் கொண்டாடுகின்றது.
வண்டாகப் பருக வருதலே
தமிழுக்கு நாமாற்றும்
தொண்டாகும்!
|
தொடர்பான பதிவு :
-
அம்மா – அவளுமோர் பிரம்மா! – வலம்புரி ஜான்
Sunday, October 18, 2009
பெரியபுராணத் தொடர் – புலவர் கீரன்
கடந்த பதிவில் புலவர் கீரன் அவர்களின் பெரியபுராணத் தொடரில் “சிறுதொண்டர்” பற்றிய சொற்பொழிவைத் தந்திருந்தேன். இப்பதிவில் அதன் தொடச்சியாக நந்தனார், திருநீலகண்டர் மற்றும் கண்ணப்பநாயனார் ஆகியோர் தொடர்பான உரையைப் பதிவு செய்கிறேன்.
(ஆரம்பத்தில் பதிவேற்றிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி!)
| Powered by eSnips.com |
» மேலதிக ஒலிக் கீற்றுக்களின் திரட்டை நேரடியாக செவிக்குணவாக்க…
Saturday, October 17, 2009
சிறுதொண்டர் – புலவர் கீரன்
புலவா் கீரன் அவர்களின் பெரியபுராணச் சொற்பொழிவுத் தொடரில் – மகவரிந்து ஊட்டிய “சிறுதொண்டர்” அவர்களைப் பற்றிய உரை…
| Powered by eSnips.com |
Sunday, October 11, 2009
பாவைப் பாட்டு – திருவெம்பாவை!
உருகாத மனமும் உருகும் திருவாசகம் அருளிய மணிவாசகரின் மணியான முத்துக்களில் ஒளிர்கின்ற ஓா் முத்தாக விளங்குவது திருவெம்பாவை.
மார்கழி என்றால் மறக்காமல் நினைவில் வரும் இத் திருவெம்பாவையை தன் தமிழால் தாலாட்டுகிறார் புலவா் கீரன் அவா்கள்!
| Powered by eSnips.com |

