“ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
பூசை முற்றவு நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக்
காசில் கொற்றத் திராமன் கதையரோ”
[பொருள் : ஓசையால் உயர்ந்த பாற்கடல் போய் ஒரு பூனை பாற்கடல் முழுமையும் குடுக்க முயல்வது எவ்வளவு அறியாமையோ… அதே போன்றது குற்றமற்ற இராம சரிதத்தை அடியேன் ஆசை கொண்டு பாட முயல்கின்ற செயலும்.]
மேலே உள்ள பாடல் கம்பனின் அவையடக்கப் பாடல்களில் ஒன்று. இப்படி அவையடக்கம் பேசிய கம்பன் இராமாயணம் முழுமையும் வம்பாக செய்தவை ரசிக்கத் தக்கவை.
இவ்வளவும் எதற்காக நீ எழுதுகின்றாய் என்று யாராவது கேள்வி கேட்டால் நான் சொல்லக் கூடிய பதில் எனக்குத் தெரிந்ததை சொல்வதற்கு வேறு இடம் கிடைக்கவில்லை என்பதே! (அட பாவி…!)
சரி அஃதிருக்க கீழே நீங்கள் காணும் காணொளி திரை உலக மார்க்கண்டேயர் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் சிவகுமார் அவர்களின் ஆழந்த இலக்கியப் புலமையைச் செப்பக்கூடிய ஒன்றாகும்.
(குறிப்பு : மேலே உள்ள காணொளியை முழுவதுமாக கண்டுகளிக்க/தரவிறக்க Veoh Web Player ஐ தரவிறக்கவேண்டி ஏற்படலாம்.)
0 பின்னூட்டல்கள்:
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்