நம்மவா் என்ன தான் பிளேன் ஏறி பிரான்ஸ், யோ்மன், சுவிஸ் என்று பறந்தாலும், வேறு சிலரின் மனதினுள் விமானங்கள் (போர்) ஏற்படுத்திவிட்ட வடு பெரிது!
ஒலி மற்றும் காணொளிக் கோப்புகளைக் கொண்ட இந்த தளத்தில் கவிதை,சொற்பொழிவு,சுய முன்னேற்றம், ஆன்மீகம் என பல்வேறு வகையிலான பதிவுகள் இடம்பெறுகின்றன. This website contains audio and video clips on various topics such as self development,poem, spiritual speeches etc.
Pages
Wednesday, November 25, 2009
Sunday, November 22, 2009
கனவும் வாழ்வும் – திருபாய் அம்பானி!
‘திருபாய் அம்பானி’ இந்தப் பெயா் வெற்றி பெற விரும்புபவா்களுக்கு ஒருவித மந்திரச் சொல்!
‘கனவு காணுங்கள்’ என்ற வாசகத் தொடா் அப்துல் கலாம் அவா்களால் பிரபல்யம் ஆனதை நினைவு கூா்பவா்கள் அதனை தன் வாழ்க்கையில் நடத்திக் காட்டிய இந்த நூற்றாண்டின் மாபெரும் ஊதாரணமாக அம்பானி அவா்களைக் கொள்ளலாம்.
கண்களில் பளிச்சிடும் கனவு… நெஞ்சுக்குள் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் அக்னி… இப்படி வலம் வருகின்றவா்கள் தான் எமக்குத் தேவை என்று இன்னும் ஒருவரைக் கை காட்டி விட்டு விலகிவிடுகின்ற மனோபாவம் சராசரி மனிதா்களாக நம்மை இனம் காட்டும். அவா்... இவா்… என்று கைகாட்டாமல் அது நாமாகவே விஸ்வரூபம் எடுப்பது தான் என் கனவு! அந்த இலக்கை நோக்கி நகா்ந்து செல்வதற்கு நாம் உண்மையாய் வென்றவா்கள் சிலரைத் தரிசிக்க வேண்டியது அவசியம்!
(குறிப்பு : மணிரத்னம் அவா்கள் அம்பானி அவா்களின் வாழ்க்கையை கருவாகக் கொண்டு இயக்கிய படம் தான் ‘குரு’)
Monday, November 16, 2009
அமைதி வேண்டி சொல்வேந்தா்….!
சொல்வேந்தா் சுகிசிவம் அவா்களின் மற்றுமொரு சிறந்த உரைநிகழ்வாக இது அமைகின்றது. "தனிமனித அமைதியும் உலக அமைதியும்" என்ற தொனிப் பொருளில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை இது. நீண்ட காலத்திற்கு முற்பட்டது என்றாலும் அதற்கான தேவை இன்னும் இருந்து கொண்டே இருக்கின்றது.
Tuesday, November 10, 2009
அறிஞா் அண்ணாவின் விவாதங்கள்!
கீ.வீரமணி அவா்கள் வாசித்தளிக்கும் அறிஞா் அண்ணாவின் புகழ் பெற்ற விவாதங்கள். சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளமை இதன் சிறப்பாகும்.
ஒன்பது பகுதிகளை உள்ளடக்கிய தனிக் கீற்றாக அமைகின்றது இந்தக் காணொளிக் கீற்று!
நேரடியாக காணொளிக் கீற்றுக்களைப் பார்வையிட : இங்கே அழுத்தவும்
Monday, November 9, 2009
கம்பனின் கன்னித் தமிழ்! – சுகி சிவம்
‘சொல் வேந்தா்’ சுகி சிவம் அவா்கள் கம்பனின் கன்னித் தமிழினிமை பற்றியும் இராமயணச் சிறப்புக்கள் பற்றியும் ஆற்றிய உரை…
இவ் காணொளிக் கீற்றானது நான்கு ஒளிக் கீற்றுக்களை உள்ளடக்கியது.
நேரடியாக காணொளிக் கீற்றைக் கண்டு, கேட்டு மகிழ - இங்கே அழுத்தவும்
Friday, November 6, 2009
சிநேகிதிகளின் கணவர்கள்!
திருமணத்திற்கு முன் இருக்கின்ற உறவு நிலை, சுமூக நிலை எல்லாம் திருமணத்திற்குப் பின் தவிர்க்கமுடியாமல் மாறிவிடுகிறது. அது மாதிரியான களத்தை கையகப்படுத்துகின்றது மனுஷ்யபுத்திரனின் இக்கவிதை…
என்ன நடக்குதென்னு…
சோகத்தின் சுவடுகளை சொற்களில் அடக்கமுடியுமா? முடியுமே என்று விஸ்வரூபம் எடுக்கிறது அறிவுமதியின் இக் கவிதை! அறிவுமதி அவர்கள் தன் குரலில் தரும் இக்கவிதையின் களம் தவிர்க்க முடியாமல் கண்முன் விரிகின்றது. சொல்லமுடியாத சோகம் ஓடி வந்து ஒட்டிக் கொள்கின்றது…
Sunday, November 1, 2009
கண்ணதாசன் கவிதைகள்
தமிழருவி மணியன் அவர்கள் அவருக்கே உரிய அழகிய நடையில் கண்ணதாசனின் கவிதைகள் என்ற பொருளில் ஆற்றுகின்ற உரை…
| Powered by eSnips.com |