Pages

Friday, September 26, 2008

காதல் சுவடு...

"கடற்கரையில்
நீ நடந்த சுவடுகளை
கடலலை அழிக்கும்

கண்ணே
என் உள்ளத்தில்
நீ நடந்த சுவடுகளை
யாரழிப்பார்"

எப்பவோ நான் எழுதின கவிதை நினைவுக்கு வந்தது இந்த காணொழி பார்க்கும் போது...

நாக்கு முக்க... நாக்கு முக்க...

அது என்னவோ தெரியலை இந்தப் பாட்டு ஒரு வித துள்ளலை எம்மை அறியாமலே ஏற்படுத்துது... அர்த்தம் இருக்கா தெரியலை... இசையில் வார்த்தைகளை குழைத்து குரலால் வித்தியாசம் செய்தால் அருமையாக பாட்டு வருமோ?

அது இருக்க... இது 'சென்னை வாழ்வின் - ஒரு நாள்' என்று இணையத்தில் உலவும் நாக்கு முக்கவின் ஒரு வடிவம்... (ஒரு வகையில சரி தான்)

Tuesday, September 9, 2008

சின்ன ராசாவே...

அண்மையில் காலமான வயலின் இசைக் கலைஞர் திரு.குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள், வால்டர் வெற்றிவேல் என்ற படத்தில் இடம்பெற்ற "சின்ன ராசாவே..." என்ற பாடலை தன் வயலினில் இசைத்த போது... (முக பாவனையும் அவரின் வயலின் இசை போல அருமை...)

வேறு சில:

மண்ணில் இந்த காதலின்றி...

ஒட்டகத்தைக் கட்டிக்கோ...

மன்மத லீலையை வென்றார் உண்டோ...?

Thursday, September 4, 2008

காதல் மேகம் கலையும்போது...

மனசை பிய்த்துப் போடும் அழகிய இம்சை காதல்... சமூக அவலங்களோடு காதலை முடிச்சுப் போட்டு கை பிடிக்கின்ற கனவு கலைக்கின்ற போது எப்படி வலிக்கும் மனசு... கவிஞரின் நாயகி படும் துயர் என்ன? கேட்டுப் பாருங்கள் கவிஞரின் குரலில்...

கொடுத்துச் சிவந்த கை...

'கொடுத்துச் சிவந்த கை' என்று சொல்லுமளவு ஈழ விடுதலைக்காகப் பல பட உதவிய தமிழக முன்னாள் முதல்வரும் திரையுலகில் கோலோச்சி, மூன்று எழுத்தில் முத்திரை பதித்தவருமான எம்.ஜீ.ஆர் அவர்கள் பற்றி வை.கோவின் பேச்சின் சிறு கீற்று...